Advertisement
-
அடுத்த பிரதமரை தமிழகம் தான் முடிவு செய்யும் : ஜெயலலிதா
more
அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், தமிழ்நாடு யாரை சுட்டிக் காட்டுகிறதோ அவர்கள் தான் அடுத்த பிரதமராக முடியும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டமும், முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் சென்னை தீவுத் திடலில் வியாழக்கிழமை மாலை நடந்தது.
இதில் தலைமையேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசியது:
கடந்த 2004-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், உங்கள் வாக்குகளைப் பெற்று, மத்தியில் காங்கிரஸ் தலைமையில், தி.மு.க. அங்கம் வகித்த கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில், இந்த மத்திய அரசு உங்களுக்கு என்ன நன்மை செய்தது? காங்கிரஸும், தி.மு.க.வும் இணைந்த மத்திய அரசால் நீங்கள் அடைந்த பயன் என்ன?
பொருளாதார சீரழிவு, அதிகரித்து வரும் தீவிரவாதம், விவசாயிகள் தற்கொலை, நதிநீர்ப் பங்கீட்டில் பாரபட்சம், வேலை இல்லாத் திண்டாட்டம், தொழில் வளர்ச்சி கடும் பாதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றிற்கு, இன்றைய மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்கும் தான் காரணம் என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். காங்கிரஸ் கட்சிக்குத் தப்பாது தாளம் போட்டுக் கொண்டு, தமிழ்நாட்டை அழிவுப் பாதையில், தி.மு.க. அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இவர்களுக்கு வரும் மே மாதம் 13-நம் தேதி அன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை எடுத்துக் கொண்டால், ஈழத் தமிழர்களுக்காக, தான் ஏதோ பெரிய தியாகங்களை செய்ததாக, கருணாநிதி குறிப்பிடுகிறார். ஆனால், 2006-ம் ஆண்டு, கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, என்ன செய்தார் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எனது ஆட்சிக் காலத்தில், கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக, நான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். கச்சத் தீவை மீட்க, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
அடுத்த முக்கியமான பிரச்னை விஷம் போல் ஏறும் விலைவாசி. தமிழகத்தில் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் முடிவதற்குள், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மும்மடங்கு உயர்ந்து, நீங்கள் எல்லாம் வாழ்க்கையே நடத்த முடியாத அளவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, ஆதரியுங்கள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை, என்று உங்களை எல்லாம் இரு கரம் கூப்பி வேண்டி கேட்டுக் கொள்கிறேன். சட்டம்-ஒழுங்கை சீராக்க, வாக்களியுங்கள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு, என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மின்சார வெட்டு காரணமாக, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, விவசாய உற்பத்தி ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வேலையில்லாத் திண்டாட்டம், வேலை இழப்பு, ஊதிய இழப்பு ஆகியவை அதிகரித்துக் கொண்டு வருவதோடு மட்டும் அல்லாமல், அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
எனது ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக விளங்கியது. வேறு மாநிலங்களுக்கு, மின்சாரத்தை வழங்கியதன் காரணமாக, அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது. கருணாநிதியின் நிர்வாகத் திறமையின்மையும், அக்கறையின்மையும், தன்னலமுமே, தற்போதைய கடுமையான மின் பற்றாக்குறைக்குக் காரணம், என்று நான் குற்றம் சாட்டுகிறேன். தரமான மின்சாரம், தங்கு தடையின்றி கிடைக்க, வாக்களியுங்கள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு.
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம், மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்திய, தி.மு.க.வினர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
குறைந்த கட்டணத்தில், விரும்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்கள் கண்டுகளிக்கவும், கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள், நிம்மதியாக தங்கள் தொழிலை செய்யவும், நான் நிச்சயம் வழிவகை செய்வேன் என்பதை, உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐந்தாண்டு கால, மத்திய காங்கிரஸ் ஆட்சியின், நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நாட்டின் பொருளாதாரம், மோசமான நிலைக்கு சென்றுள்ளதையும், தீவிரவாதம் அதிகரித்துள்ளதையும், நீங்கள் நன்கு அறிவீர்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை, தி.மு.க. தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. எனவே, இந்திய நாட்டின் தற்போதைய பின்தங்கிய நிலைக்கும், பெருகி வரும் தீவிரவாதத்திற்கும், தி.மு.க-விற்கும் பங்கு உண்டு. இதற்கு தி.மு.க.வும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஐந்து ஆண்டு கால மத்திய காங்கிரஸ் ஆட்சியில், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
ஒன்றை செய்வேன் என்று நான் சொன்னால், அதை எப்படியும் செய்து முடிப்பேன் என்பது உங்களுக்கு தெரியும். வீராணம் ஏரியில் இருந்து, தண்ணீரை சென்னைக்குக் கொண்டு வந்து, சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவேன் என்று சொன்னேன். அது முடியாது என்று எதிரிகள் கூறினர். ஆனால், அதை எப்படியும் செய்து முடிப்பேன் என்று சபதம் மேற்கொண்டேன். சொன்னதை செய்து முடித்தேன்.
காட்டுக் கொள்ளையன், சந்தனக் கடத்தல் வீரப்பனை, பிடித்தே தீருவேன் என்று சபதம் மேற்கொண்டேன். அதையும் செய்து முடித்தேன்.
தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத் தரவும், தமிழ்நாட்டு மக்களுக்கு, வளமான வாழ்வை பெற்றுத் தரவும், நான் போராடுவேன்; அதை சாதித்தே தீருவேன். தமிழ்நாட்டிற்காக நான் எதையும் செய்வேன். எனக்கு தன்னலம் கிடையாது. சுயநலமும் கிடையாது. எனக்கென்று குடும்பமும் கிடையாது. குடும்ப நலத்திற்காக தமிழ்நாட்டின் உரிமையை, மத்திய அரசிடம் விட்டுக் கொடுக்க மாட்டேன். தமிழக மக்களின் வாழ்வை, மத்திய அரசின் காலடியில் அடகு வைக்க மாட்டேன்.
அடுத்து அமையப் போகும், புதிய மத்திய அரசிடம், வாதாடி, போராடி, தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், தேவையானவற்றை எல்லாம் பெற்றுத் தருவேன். இதை நிச்சயமாக செய்து முடிப்பேன்.
அதற்காக நீங்கள் எனது கரத்தை வலுப்படுத்த வேண்டும். என்னை நம்பி, என் மீது முழு நம்பிக்கை வைத்து, இந்த தேர்தலில் நீங்கள், எனக்கு முழு ஆதரவை தர வேண்டும். தமிழ்நாட்டிற்கு என்னென்ன தேவையோ, அவற்றையெல்லாம், மத்திய அரசிடம் வாதாடி, போராடி, தமிழ் நாட்டிற்கு பெற்றுத் தந்து காட்டுவேன். இதை நான் செய்து முடிப்பது திண்ணம்.
ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தேர்தலில் நீங்கள் அளிக்கும் முடிவைப் பொறுத்து தமிழ் நாட்டிற்கு நீங்கள் ஒரு புதிய வரலாற்றை ஏற்படுத்தும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் முழு ஆதரவைத் தந்தால் 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணிக்கு நீங்கள் வெற்றியைத் தந்தால், இந்தியாவிலேயே புதிய வரலாறு எழுதப்படும். தமிழ்நாட்டிற்கு புதிய முக்கியத்துவம் கிடைக்கும். தனி முக்கியத்துவம் கிடைக்கும். முழுமையான வெற்றியை இந்த அணிக்கு நீங்கள் தந்துவிட்டால், இனி அடுத்த மத்திய அரசு தமிழ்நாடு எப்படி சொல்கிறதோ அப்படித்தான் அமையும். தமிழ்நாடு யாரை சுட்டிக் காட்டுகிறதோ அவர்கள் தான் அடுத்த பிரதமராக முடியும். இதை நினைவில் வைத்துக்கொண்டு உங்கள் தீர்ப்பைத் தாருங்கள்," என்றார் ஜெயலலிதா. -
யார் இந்த அழகிரி ?
more
கோவில்களில் தேவதாசி முறை ஒழிக்கப் பட்ட பின் வந்த தலைமுறையினர் பிற ஜாதியினரைப் போல சாதாரணமான குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி, அடுத்த தலைமுறையினர் படித்து முன்னேறி இன்று சமூகத்தில் உயர் நிலைக்கு சென்று விட்டனர். இந்த ஜாதியினரின் முன்னேற்றத்தில் இதே ஜாதியில் இருந்து வந்த கருணாநிதியின் பங்கு முக்கியமானது.. அவர்கள் அனைவருக்கும் அவர் தெய்வம் போல. இன்று இந்த ஜாதியில் யாரும் தாசிகளாகவோ விலைமகளிராகவோ மாறுவது இல்லை. பெரிய சமூக சீர்திருத்தம் நடந்து விட்டது அவர்கள் இனத்தில் இருந்தாலும் அவர்கள் ஜாதியையைப் பற்றித் தெரிந்தவர்கள் அவர்களை மிகவும் கேவலமாக அழைக்கும், தாழ்வாக ஏளனம் செய்யும் நிலமை இன்றும் இருந்து வருகிறது. தமிழ் நாட்டின் முக்கியமான இரண்டு தலைவர்களான அண்ணா என்ற துரைசாமியும், கருணாநிதி என்ற தட்சிணா மூர்த்தியும் இந்த ஜாதியில் இருந்து வந்தது அவர்கள் பெரும் அளவில் முன்னேற வசதியாக இருந்தது, ஈ வெ ரா கூட இந்த இருவரையும் மோசமான வார்த்தைகளில் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளார். அண்ணாத் துரை ஐயங்காருக்குப் பிறந்தவர் என்பார்கள். இந்த ஜாதியில் இன்று பெரும்பாலோர் படித்து ஐ ஏ எஸ், ஐ பி எஸ், டாக்டர், இஞ்சினீயர் என்று முன்னேறி விட்டனர். கருணாநிதி அவர்களை மிகவும் பின் தங்கிய பட்டியலில் சேர்த்தது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
இன்று பலரும் முன்னேறி விட்டாலும் வெளியில் தங்கள் ஜாதியைப் பொதுவாக பிள்ளைமார்கள் என்றே சொல்லிக் கொள்வார்கள். ஏளனத்துக்கு அஞ்சி தன் சொந்த ஜாதியையயச் சொல்லத் தயங்குவார்கள். தலித்களின் நிலமையய விட இவர்களின் நிலமைக்காக நான் பெரிதும் பரிதாபப் பட்டிருக்கிறேன், அவமானத்தைச் சிலுவையாக சுமக்க நேரிட்டவர்கள்.
இது போன்ற சமுதாயத்தில் மிக இகழ்வாகக் கருதப் பட்ட ஒரு பின்புலத்தில் இருந்து வந்த கருணாநிதிக்கு பல்வேறு தந்திரங்களும், திறமைகளும்,சூழ்ச்சிகளும் தானாகவே கை வந்த கலையாய் வந்து சேர்ந்தன. ஒரு மோசமான சமூகச் சூழ்நிலையில் பிறந்து ஆதிக்க ஜாதி பின்புலன்கள் இல்லாத கருணாநிதியின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாகும். ப்ரூஃ ரீடர், சினிமாக் கம்பெனி எடுபிடி, வசனகர்த்தா, அரசியல் மேடைப் பேச்சாளர் என்று பல்வேறு வேலைகள் பார்த்து தி மு க வின் முக்கியமான நபர்களில் ஒருவராக மிகவும் தந்திரமும், குள்ளநரித்தனமும், அனைத்துக் கீழ்த்தர குணங்களும் நிரம்பிய ஒரு அபாயகரமான அரசியல்வாதியாக கருணாநிதி உருவெடுத்து தி மு க வின் பிற சீனியர் தலைவர்களைப் புறம் தள்ளி, தந்திரமாகத் தலைவர் பதவியைப் பிடித்து இன்று 50 வருடங்களாகின்றன.
இந்தக் கருணாநிதிக்கு மூன்று மனைவிகள் (வைத்துக் கொண்டவை கணக்கில் இல்லை) முதல் மனைவி பிரபலப் பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி. அந்த மனைவிக்குப் பிறந்தவர் மு க முத்து. இவரைத் தான் தன் வாரிசாகக் கொண்டு வரவேண்டும் என்று ஆரம்பக் காலத்திலேயே கணக்குப் போட்டுக் காய் நகர்த்தினார் கருணாநிதி. நல்ல முகவெட்டும், குரல் வளமும் இருந்த முத்துவை அன்று தி மு க வின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எம் ஜி யாருக்குப் போட்டியாகக் கொண்டு வர வேண்டும் என்று கருணாநிதி குள்ளநரித்தனமாகப் போட்ட தப்புக் கணக்கு அவருக்கு பெருத்த அடியாக விழுந்தது. மு க முத்துவும் எம் ஜி யார் பாணியிலேயே நடிக்க ஆரம்பித்தார். சமையல்காரன், வெள்ளிக் கிழமை, சொந்தக்காரன் போன்ற பல படங்களில் நடித்த மு க முத்துவின் திட்டமிடப் பட்ட வளர்ச்சி எம் ஜி ஆருக்கு பலத்த ஆத்திரத்தை வரவழைத்து கட்சியில் இருந்து வெளியேற வைத்தது அடுத்த 12 வருடங்களுக்கு கருணாநிதியின் அஸ்தமனத்துக்கு வழிவகுத்தது. எம் ஜி யார் சாகும் வரை கருணாநிதி தலை தூக்க முடியவில்லை. எம் ஜி யாருக்குப் போட்டியாக உருவாக்கிய கருணாநிதியின் மகன் போதைக்கு அடிமையாகி மீள முடியாத குடிகாரனாகி கருணாநிதியாலேயே புறக்கணிக்கப் பட்டு அநாதையாக மாறிப் போனார். பிற்காலத்தில் ஜெயலலிதா கருணாநிதியை அவமானப் படுத்த முத்துவுக்கு 5 லட்சம் நிதியுதவி அளித்தார். முத்து நடைப்பிணமாகிப் போக கருணாநிதியின் ஒரு கனவு சிதைந்தது. பின்னர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகளின் மீது தன் கனவை மீண்டும் எழுப்பத் தொடங்கினார். மூன்றாவதாக சேர்த்துக் கொண்ட துணைவிக்கு ஒரு மகள். இரண்டாவது மனைவிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் என்று நினைக்கிறேன். யாரும் கருணாநிதி அளவுக்கு பிரகாசிக்கவில்லையெனினும், நம்பிக்கை இழக்காமல் தன் சாம்ராஜ்யத்தைத் தொடர இருக்கும் வாரிசுகளையே நம்ப ஆரம்பித்தார். அதில் தமிழரசு என்ற மகன் வங்கி வேலைக்குச் சென்று ஆரவாரத்தில் இருந்து ஒதுங்கி விட அரசியலில் ஆர்வம் காண்பிக்க ஆரம்பித்த ஸ்டாலினை மட்டும் தொடர்ந்து தன் வாரிசாக வளர்க்க ஆரம்பித்தார்.. ஸ்டாலின் அரசியல் வாரிசாக வளர்த்து விட்டதால் அழகிரி என்ற மகனுக்கு ஒரு வியாபாரத்தை அமைத்துக் கொடுத்து மதுரையில் கொண்டு போய் செட்டில் பண்ணினார்.
மதுரை திருநகரில் கோவிந்த சாமித் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியமர்த்தப் பட்டார் இந்த அழகிரி. இவரது மனைவி மதுரை சமயநல்லூரைச் சேர்ந்த ஒரு தலித். மதுரை பஸ்ஸ்டாண்டில் ஒரு வீடீயோ, காசெட் கடையும், ஒரு டி வி விற்பனை ஏஜென்சியும் இந்த அழகிரிக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டது. ஒரு ஸ்கூட்டரில் திருநகரில் இருந்து கிளம்பி கடையில் போய் கடைக்கு வெளியே நின்று தம் அடித்துக் கொண்டிருப்பார். அவரை ஒரு சிலருக்கே கருணாநிதியின் மகன் என்று தெரியும். அவ்வளவு பிரபலம் கிடையாது. தெருக்காரர்கள் யாரும் பேசிப் பழகி பார்த்ததில்லை. எப்பொழுதாவது கருணாநிதி நீளமான காரில் வந்து போவார். அழகிரி அப்பா மாதிரியே காலுக்கு வெள்ளைக் கலர் செருப்புப் போட்டுக் கொள்வார். கார் கூட கிடையாது. அப்பொழுது மதுரையில் நெல்பேட்டை சீனி, பழக்கடைப் பாண்டி, மதுரை முத்து, என்று பல திராவிடக் கட்சிகள் ரவுடிகள் தங்கள் சாம்ராஜ்யத்தை அமைத்திருந்தனர். அதனால் புதிதாக ஒரு ரவுடி பெரிய அளவில் உருவாக வாய்ப்பு இருக்க வில்லை. மேலும் பழனிவேல்ராஜன் போன்ற ஜமீந்தார்கள் தி மு க வின் செல்வாக்கான நபர்களாக இருந்தமையாலும், லோக்கல் ஜாதியான தேவர்கள் இனத்தில் இருந்து வராததாலும் 90 வரை அழகிரி என்பவர் அடையாளமில்லாத சாதாரண ஒரு காசெட் கடை உரிமையாளராக மட்டுமே இருந்தார். 90ல் மீண்டும் கருணாநிதி ஆட்சியைப் பிடித்ததில் இருந்துதான் அழகிரியின் அசுர வளர்ச்சி ஆரம்பித்தது. கருனாநிதி அரசு கலைக்கப் பட்ட பொழுது இவர் தென் தமிழ் நாட்டின் முடிசூடா மன்னராக ஆட்சி செலுத்த ஆரம்பித்தார். தனது வீட்டையும் வாடகை வீட்டில் இருந்து மதுரை டி வி எஸ் நகரினில் உள்ள சத்தியசாய் நகர் பகுதிக்கு மாற்றிக் கொண்டார். எதிர் வீடு தினமலர் ஆசிரியர் லஷ்மிபதியின் வீடு. தினமலர் காரருக்குச் சனி பிடித்தது. மதுரையில் மெதுவாக ரவுடிகளின் தலமை அழகிரியிடம் இடம் பெயர்ந்தது. பழனிவேல் ராஜன் என்ற அரிஸ்டோகிராட் அரசியல்வாதி முதல் பழக்கடைப் பாண்டி போன்ற தேவர் இனத்து ஆட்களின் முக்கியத்துவம் குறைந்தது. அழகிரி ஒரு அதிகார மையமாக உருவெடுக்க ஆரம்பித்தார். கலெக்டர், கமிஷனர், எஸ் பி, எல்லோரும் அவர் வீட்டு வாசலில் காத்துக் கிடக்க ஆரம்பித்தனர். வரிசை வரிசையாக அழகிரியிடம் சிபாரிசுக்காகவும், பதவிகளுக்காகவும் படையெடுக்க ஆரம்பித்தனர். அழகிரியின் பிறந்த நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டன. அமைதியாக இருந்த டி வி எஸ் நகர்/சத்யசாய் நகர் பரபரப்பான அதிகார மையமாக மாறியது. அழகிரியின் பிறந்த் நாட்களின் பொழுதும், திருமண நாளின் பொழுதும், அதிகாரிகளும் கட்சிக்காரர்களும் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தங்கள் கப்பத்தைக் கட்டி விட்டுச் சென்றார்கள். கோடிக்கணக்கான பணம் புரள ஆரம்பித்தது. அழகிரியின் பெண் பெரிய பெண் ஆனது வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது, பல கோடிகள் வசூலாகியது. அடுத்த அடுத்த ஜெயலலிதா ஆட்சிகளின் போது அழகிரி சற்று அடங்கினாலும் அவரது செல்வாக்கு என்றும் அடங்கவேயில்லை. அவரது சாம்ராஜ்யம் பெரிதாக விரிந்தது, தனக்கென்று ஒரு லாயல் சர்க்கிள் உருவாக்கி தனக்கு ஒரு எம் எல் ஏ கோஷ்டியை உருவாக்கி வைத்துள்ளார். இன்றும் அவர் நினைத்தால் ஆட்சியைக் கவிழ்க்கலாம். இப்படி 89 வரை ஸ்கூட்டரில் பயணித்த ஒரு சாதாரண உதாவக்கரை பையன் இன்று பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதி. பண பலம் ,அதிகார பலம், அதிகாரிகள் காலில் விழுந்து வணங்குகிறார்கள். ஜெயலலிதா ஏதோ ஒரு காரணத்தினால் வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் அழகிரியை அடிக்காமல் விட்டு வைத்தார். இன்று மதுரையில் அழகிரி வைத்ததுதான் சட்டம், மதுரர முழுக்க ரியல் எஸ்டேட்டுகள் வளளத்துப் போட்டுள்ளார். ஏராளமான பினாமிகள். எதிர்க்கத் துணிந்த பலரும் கடுமையாகத் தாக்கப் பட்டனர். அவரது அதிகார மையத்தை தன் ஜாதி பின்புலம் கொண்டு எதிர் கொள்ள நினைத்த தா கிருஷ்ணன் கொடூரமாக வெட்டிக் கொல்லப் பட்டார். தேவர் ஜாதி வீரம் , பெருமை வெட்டிப் பெருமை என்பது நிரூபிக்கப் பட்டது. அழகிரியின் கை மேலும் பலப் பட்டது. இன்று தமிழ் நாட்டை ஆட்டுவிக்கும் முக்கியமான அரசியல் சக்திகளில் ஒருவர் அழகிரி. ஒரு உதவாக்கரை மகனில் இருந்து தந்திரமும், ரவுடித்தனமும், கொலைவெறியும், பண வெறியும் நிரம்பிய ஒரு கருணாநிதியின் பல அம்சங்களைக் கொண்ட ஒரு வாரிசாக உருவாகியுள்ளார். இவரது மகன் துரை தயாநிதி மதுரையின் மத்தியில் மாபெரும் ஐ டி பார்க்கை தயா ஐ டி பார்க் என்ற பெயரில் கட்டி முடித்து விட்டார். இவரும் ஒரு சினிமா கம்பெனி துவங்கியுள்ளார். தமிழ் நாட்டில் புதுப் படங்கள் அனைத்தும் இவர்களுக்குத்தான் விநியோக உரிமை இவர்கள் சொல்லும் காசுக்குக் கொடுக்க வேண்டும் கொடுக்கா விட்டால் படத்தை தியேட்டரில் வர விட மாட்டார்கள். கம்பெர்னியின் பெயர் ரெட் சன் என்றோ என்னமோ அழகிய தமிழில் வைக்கப் பட்டுள்ளது. அழகிரியின் மகளை அரசியலில் அடுத்த தலைமுறை வாரிசாக கொண்டு வந்து கொண்டிருக்கிறார். வார்த்தை மாதிரியான பத்திரிகைகளில் கூடிய விரைவிலேயே அவரது நூறு பக்க நூதன பேட்டி வரலாம் படிக்கத் தவறாதீர்கள். இன்னொரு பெண் காதல் திருமணம் செய்து அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் பறந்து கொண்டிருக்கிறார். மனைவி காந்திக்கு மதுரையில் மாபெரும் ஜவுளிக் கடை, திருமண மண்டபம் எல்லாம் இருக்கிறது. வாரன் பஃபெட்டை விட இவர்களது சொத்து மதிப்பு அதிகம் இருக்கக் கூடும் என்று அதிகாரபூர்வமான கணக்குச் சொல்லுகிறது.
அந்தக் காலத்தில் வாரிசுகளுக்குள் நடந்த போர்களையும், கொலைகளையும் படித்துள்ளோம் வரலாற்றில். தமிழ் நாடு என்றும் மாறவேயில்லல. வரலாறு மீண்டும் மீண்டும் அரங்கேறுகிறது. சமுதாயத்தால் பழிவாங்கப் பட்ட தாசி குலம் இன்று சமுதாயத்தைப் பழிவாங்குகிறது. கருணாநிதியின் அரஜாகங்களையும் அட்டூழியங்களையும் விட அவரது வாரிசுகளின் அட்டூழியங்கள் இன்னும் உக்கிரமமாக இருக்கப் போகின்றன. இதில் இருந்து எல்லாம் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தமிழ் நாடு விட்டு விடுதலையாகி வருமா ? அழகிரி இன்று தி மு க வில் அசைக்க முடியாத சக்தி. அழகிரி, மாறன் குடும்பம் எல்லோரையும் அனுசரித்துதான் கருணாநிதியும் ஸ்டாலினும் பிழைப்பு நடத்த முடியும். இவர்களது ரவுடித்தனங்களும் , கொள்ளைகளும் மக்களை மெதுவாக விஜயகாந்த் பக்கம் தள்ளி விடும். அது தனிக் கதை. மொத்தத்தில் நம் தலையெழுத்து சரியாக இல்லை. ரவுடிகளின், அயோக்கியர்களின், அழகிரிகளின், ஸ்டாலின்களின், மாறன்களின் தயவில்தான் தமிழக மக்கள் உயிர் வாழ வேண்டிய கேவலமான சூழ்நிலையில்தான் இன்றைய தமிழகம் சிக்கியுள்ளது. இதிலிருந்து மீள்வது மிக மிக கடினம். அழகிரி போன்ற ஆட்களும், மாறன் போன்றவர்களுமே நம் தலைமுறைக்கு முன்மாதிரியாகி விட்ட கேவலமான கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம். -
4,795+... தமிழர்களின் புதைகுழிகளின் மேல் கைகளை வைத்து;
more
தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா.
பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றைய இந்திய அரசின் பேராதரவுடன் தமிழர்களுக்கு எதிரான போரை சிறிலங்கா நடத்துகின்றது.
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலே, மருத்தவ மற்றும் பொது நிர்வாக வட்டாரங்கள் சேர்த்த புள்ளி விபரங்களின் படி -
இந்த வருடத்தின் அந்த முதல் 101 நாட்களில் மட்டும் -
கொல்லப்பட்ட 4,795 தமிழர்களில் - 1,207 சிறுவர்களும் 51 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர்.
காயமடைந்த 9,869 தமிழர்களில் - 2,864 சிறுவர்களும் 149 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர். 1,437 தமிழர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்; அவர்களில் 394 பேர் சிறுவர்கள்.
வன்னியில் இருந்த அனைத்துலக தொண்டு நிறுவனங்களினதும், ஐ.நா. சபையினதும் செயலாட்கள் இந்திய காங்கிரஸ் அரசினது ஆலோசனைக்கு அமைவாக எப்போதோ அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.
தனது படைகளின் கவசப் போர் ஊர்திகளின் இரும்புச் சங்கிலிகளால் - தமிழரது உடலங்களை மிதித்து கொண்டு தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிறிலங்கா, அங்கு கடைசியாக எஞ்சியிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பணியாட்களையும் வெளியேற்றிவிட்டது.
போர்ப் பிரதேசங்களில் சேவையாற்றுவதே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அடிப்படைப் பணி; ஆனால் - சிறிலங்காவின் உத்தரவுக்கும், இந்திய அரசின் செல்வாக்கிற்கும் அஞ்சி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.
சாட்சி சொல்ல யாருமற்ற தமிழினத் துடைத்தழிப்பு (Genocide), எம் மண்ணில் அவல ஓலங்களுடன் அரங்கேறுகின்றது.
வாய் கிழிய மனித உரிமைகள் பற்றிப் பிரசங்கம் செய்யும் இந்த உலகமோ, எல்லாம் தெரிந்த போதும், கை கட்டிப் பார்த்து நிற்கின்றது.
இந்திய அரசுக்கு எதிராய் ஒரு சுண்டுவிரலைத் தானும் நீட்ட வக்கற்று இந்த உலகம், 'இராஜதந்திரம்' என்ற பெயரில் வெட்கம் கெட்டு நிற்கின்றது.
"இலங்கை விடயத்தில் இருந்து நீங்கள் வெளியில் போய் விடுங்கள்" என்று எம்.கே.நாராயணன் தன்னிடம் நேரடியாகவே சொன்னதாக, எரிக் சொல்ஹெய்ம் எனது நண்பர் ஒருவரிடம் வெளிப்படையாகவே சொல்லியுள்ளார்.
மேலும், அண்மையில் - தம்மால் "அதிசயம் எதனையும் நிகழ்த்த முடியாது" என்று சொன்ன எரிக் சொல்ஹெய்ம், "அமெரிக்காவோடு பேசுவேன், ஜப்பானோடு பேசுவேன், ஐரோப்பிய ஒன்றியத்தோடு பேசுவேன்" என்றுவிட்டு இந்தியா பற்றி வாய் திறப்பதை வேண்டும் என்றே தவிர்த்துவிட்டார்.
ஏற்கெனவே விலக்கப்பட்டிருந்த நோர்வேயை, இப்போது - சிறிலங்காவை வைத்து அதிகாரபூர்வமாகவே அங்கிருந்து வெளியேற்றிவிட்டது இந்தியா.
இன்னொரு வகைளில் சொல்லப் போனால் - 'இலங்கைப் போரை நாம் தான் நடத்துகின்றோம்; வேறு யாரும் அங்கு தலையிடத் தேவையில்லை' என்று மேற்குலகிற்கு இந்தியா அரசு சொன்ன செய்தி அது.
'போரை நிறுத்து' என்று சும்மா சொன்னால் போர் நிற்காது என்பது தெரிந்திருந்தும், 'போரை நிறுத்து' என்று புலம்புகின்றது இந்த உலகு.
ஈழத் தமிழனைக் காப்பதே தன் 'கடைசிச் சாதனை' என்று வாய்ச் சவடால் விட்ட கருணாநிதியோ, தமிழனை 'அம்போ' என்று கைவிட்டுவிட்டு, தனது ஏதோ ஒரு கடைசி ஆசைக்காக காங்கிரஸ் காரர்களின் கால்களில் விழுந்து நக்கத் தொடங்கிவிட்டார்.
எல்லோருமாகச் சேர்ந்து - தமிழனின் காதிலே பூ சுற்றி, அவனின் தலையிலே இப்போது மிளகாயும் அரைக்கின்றார்கள்.
சிங்களப் படையெடுப்பை நிறுத்தி, நடந்துகொண்டிருக்கும் மாபெரும் மனிதப் பேரவலத்தைத் தடுக்கத் திராணியற்ற உலகமோ, இப்போது - உலகத் தமிழ் செயற்பாட்டாளர்களை அழைத்து வைத்துக்கொண்டு - 'போருக்குப் பின்னான காலம்' என்றும் 'புலிகளுக்குப் பின்னான காலம்' என்றும் பசப்பு வார்த்தைகள் பேசத் தொடங்குகின்றது.
போரும் முடிந்து, புலிகளும் முடிந்த பின்னர் - ஏதோ அவர்களே இறங்கி நல்ல தீர்வு வாங்கித் தருவார்கள் என்று எம்மை நம்பவைக்கும் விதமாகப் பேசி மயக்கத் தொடங்குகின்றது உலகு.
போரும் முடிந்து, புலிகளும் முடிந்து போன பின்னர் யாரும் தமிழனை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை என்பது, சொல்லுகின்ற அவர்களுக்கும் கேட்கின்ற எமக்கும் தெளிவாகவே தெரியும்.
யாருடைய மயக்குதலுக்கும் நாங்கள் இனி ஆளாகத் தேவையில்லை; எல்லாம் முடிந்து போன பின்னர், கருணாநிதியின் கருணையும் எமக்குத் தேவையில்லை.
இந்த உலகத்தையே இப்போது நாங்கள் உலுக்க தொடங்கிவிட்டோம்.
சிவப்பும், மஞ்சளும், புலி பாயும் எங்கள் செங்கொடியுமாக - உலகத் தலைநகரங்களை நாங்கள் நிறைத்த பின்னர்தான், எமது செய்தி என்ன என்பதை நிதானமாகக் கேட்கின்றது உலகு.
'பயங்கரவாத'ப் பட்டம் சூட்டி - நிராகரித்து - எம்மைப் பயமுறுத்தி வைத்திருந்த காலம் எல்லாம் மலையேறிப் போயே போய் விட்டது.
உலக ஊடகங்களின் படப்பிடிப்புக் கருவிகளுக்கு நேர் முன்னால் நின்று - "விடுதலைப் புலிகள் எங்கள் சுதந்திரப் பேராளிகள்!" என்று நேரடியாகச் சொல்ல நாம் துணிந்து விட்டோம்.
"புலிகளுக்கு எதிரான போர் என்பது தமிழர்களுக்கு எதிரான போரேதான்" என்று நாம் உரக்கச் சொல்லத் தொடங்கிவிட்டோம்.
புலிகளைத் தடைசெய்து விட்டு - 'பயங்கரவாதிகள்' என்று தமிழனைக் கொச்சைப்படுத்தி ஒதுக்கிய நாடுகளின் காவல்துறையும், சட்டமும் - இன்று, புலிக்கொடிகள் தாங்கி நாங்கள் லட்சக்கணக்கில் அவர்களது தெருக்களிளேயே அணிவகுக்கின்றபோது - ஒரு ஓரமாகப் பார்த்து நிற்கின்றன என்பது தான் யதார்த்தம்.
இப்படி ஒரு காட்சியை இரண்டு வருடங்களுக்கு முன்னால் நாங்கள் கற்பனை கூடச் செய்து பார்த்தது கிடையாது.
புலிக்கொடி பிடித்தாலோ அல்லது புலிகள் பற்றிக் கதைத்தாலோ இந்த உலகம் எம் கதையைக் கேட்காது என்று மிக அண்மைக்காலம் வரை நாமே எமக்குச் சொல்லிக்கொண்டு சும்மா கிடந்தோம்.
ஆனால், இவ்வளவு காலமும் எமது போராட்டங்களுக்குச் செவிமடுக்காத உலகு, இன்று - புலிக்கொடிகளோடு நாங்கள் வீதிகளில் இறங்கிய பின்னர் தான் எங்கள் கதையைக் கேட்கின்றது.
விடாப்பிடியான - ஓய்வற்ற - எங்கள் போராட்டத்தின் மூலம் உலகத்தின் மனச்சாட்சிக்குள் பெரும் பூகம்பத்தையே நாங்கள் இன்று நிகழ்த்த தொடங்கிவிட்டோம்.
இருந்தாலும் - எமக்குச் சாதகமாக உலகில் எதுவும் நடக்காதது போல எமது பார்வைக்கு இப்போது தோன்றலாம்; அதில் இப்போதைக்கு ஓரளவுக்கு உண்மையும் இருக்கலாம்.
புலிக்கொடிகளோடு நாம் அலைந்து திரிவது தான் அதற்குக் காரணம் என்று சிலர் சொல்லப்பார்க்கின்றார்கள்; ஆனால், உண்மைக் காரணம் அதுவல்ல.
எமக்குச் சாதகமான சூழல் வெளிப்படையக அமைவது தாமதம் ஆகுவதற்கு இரண்டு முதன்மையான காரணங்கள் உள்ளன:
ஒன்று -
தங்களது தலைநகரங்களை நிறைத்துப் போராடுகின்ற தமிழரது உணர்வுகளுக்கு அடிப்படையாக உள்ள தமது 'மனிதாபிமான விழுமியங்களுக்கும்' (Humanitarian Values) -
சிறிலங்காவைத் தனது கைப்பொம்மையாக வைத்து ஆட்டுகின்ற இன்றைய இந்திய அரசுடனான தமது 'வெளியுறவுக் கொள்கை'க்கும் -
தென்னாசிய, இந்த சமுத்திர பிராந்தியத்தில் தமக்கு இருக்கின்ற 'கேந்திர நலனுக்கும்' இடையில் பின்னப்பட்டிருக்கின்ற 'இராஜதந்திர' வலையில் இந்த உலகு சிக்குண்டிருக்கின்றது.
இரண்டாவது -
அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டின் அரசாங்கம் (Government of a Sovereign State) என்ற வகையில் - தனது ஆட்சி எல்லைக்குள் உள்ள நிலம் மீதும், மக்கள் மீதும் தனது சக்தியையும் அதிகாரத்தையும் பிரயோகிக்கும் உரிமை சிறிலங்கா அரசிற்கு உள்ளதால், தனது அதிகார பலத்தை தனது எல்லைக்குள் மட்டும் பிரயோகிக்கும் ஒர் அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாத 'சட்ட வலைக்குள்ளும்' இந்த உலகு சிக்குண்டுள்ளது.
எமக்குச் சாதகமான சூழல் உலகில் ஏற்படாதது போல தோன்றுவதற்கு இவை இரண்டுமே முதன்மைக் காரணிகள்; ஒரு அளவுக்கு மேல் எம்மால் எதனையும் இந்த உலகிடம் இப்போதைக்கு எதிர்பார்க்கவும் முடியாது.
உலகை ஆளும் இயங்கு மையம் 'மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி' நகர்ந்து தென்னாசியப் பிராந்தியத்தில் இப்போது நிலைகொள்வதாகச் செல்லப்படுகின்றது.
'ஒற்றை வல்லரசு' தகுதியை அமெரிக்கா இழந்துவர - 'பூகோள வல்லரசு' என்ற நிலைக்காக இந்தியாவும் சீனாவும் இப்போது போட்டியிடுவதாகவும் நோக்கப்படுகின்றது.
இவற்றுக்குப் பின்புலமாக - பொருளாதார, அரசியல், பாதுகாப்பு மற்றும் கேந்திர நலன்கள் கொண்ட - நுணுக்கமான பல காரணங்கள் இருக்கின்றன.
நடந்துவரும் இந்த உலக மாற்றத்தைப் பின்னணியாக வைத்தே, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் நாம் நோக்க வேண்டியுள்ளது.
இந்தியாவை மீறி இப்போதைக்கு இந்த உலகம் எதுவும் செய்ய முடியாதுள்ளது என்பதையும் இந்தப் பின்னணியை வைத்துத்தான் நாம் பார்க்க வேண்டும்.
2001 செப்ரெம்பருக்குப் பின்னான உலகச் சூழலைச் சரிவரக் கணிக்காமல் விடுதலைப் புலிகள் இயக்கம் விட்ட சில அரசியல் - இராஜதந்திர - இராணுவத் தவறுகளும் இன்றைய பின்னடைவு நிலைக்குக் காரணம் என்பதும் உண்மைதான்.
ஆனால், இன்று நிலைமை எப்படி இருந்தாலும், எமக்கான காலம் உலகில் கனிந்து வருகின்றது என்பது தான் உண்மை; ஆனால், அது சற்று காலதாமதம் ஆகின்றது.
அடுத்து வருகின்ற ஓரிரு மாத காலம் தான் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்ற காலம்.
இதுதான் உச்ச நேரம்; இந்த ஒரிரு மாத காலத்தின் ஒவ்வொரு நாளும் பெறுமதியானவை.
உலக ஓட்டத்தை உற்று நோக்கினால் ஒரு விடயம் எமக்குத் தெளிவாகப் புரியும்; இனத் துடைத்தழிப்புப் படுகொலைகள் உலகில் நிகழ்ந்த போது, எங்குமே அவை தடுக்கப்பட்டதில்லை.
இன அழிப்புக்கள் நிகழும் போது யாரும் அதில் தலையிடுவதுமில்லை: அவ்வாறு தலையிடாமல் இருப்பதற்கு அவரவருக்கு அவரவரது சொந்தக் காரணங்கள் உண்டு; யாரையும் இதில் குற்றம் சாட்டவும் முடியாது.
எல்லாம் முடிந்த பின்னர் தலையிட்டு - விசாரணை, புனர்வாழ்வு, மீள் கட்டுமானம், அது, இது என்று அடுக்கெடுப்பது தான் உலக வழமை.
அதுதான் - "Post Conflict Scenario"
இப்போது - எமது விடயத்திலும் - போரும் முடிந்து, இன அழிவும் முடிந்த பின்னர் - பெட்டி படுக்கைகளோடு வந்து இறங்குவதைத் தான் "போருக்குப் பின்னான காலம்" என்று பேசுகின்றார்கள்.
ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரையில் -
முன்னைய காலங்களில் இனத்-துடைத்தழிப்புக்கு உள்ளாகிய இனங்களுக்கு இருந்திருக்காத சாதகமான புற மற்றும் அகச் சூழ்நிலைகள் எமக்கு இப்போது உள்ளன என்பது தான் நாம் இங்கே கவனிக்க வேண்டிய விடயம்.
நான்கு விடயங்கள் முக்கியமானவை:
ஒன்று - எப்போதோ முடிந்துவிடும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும், மிகப் பலமாக இன்னமும் தொடரும் விடுதலைப் புலிகளின் மரபுவழி ஆயுதப் போராட்டம்.
இரண்டாவது - அனைத்துலக அரங்கில் தமிழர்கள் நடத்தும் - மிக வலிமையான - உதாசீனம் செய்து ஒதுக்கிவிட முடியாத பேரெழுச்சிப் போராட்டங்கள்.
மூன்றாவது - தமிழ்நாட்டு மக்களின் - கேள்விக்கிடமற்ற - ஏகோபித்த துணையும், உலகத் தமிழினம் ஒரே குடையின் கீழ் அணிதிரண்டிருக்கும் பலமும்.
நான்காவது - உலக வல்லரசு நிலைமாற்றங்கள், தென்னாசியாவின் வளர்ந்து வரும் கேந்திர முக்கியத்துவம் என்பவற்றுடன், இந்தியத் தேர்தல்.
இந்த நான்கில் முதல் இரண்டு விடயங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன.
இன அழிப்புப் படுகொலையைத் தடுத்து நிறுத்துங்கள் என்று போராடினால் தான் உலகத்தின் கவனத்தை நாம் ஈர்க்க முடியும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, ஆயுதப் போராட்டம் உச்சமாக நிகழ்கின்ற போது முன்வைத்தால்தான் எமது அரசியல் கோரிக்கைகளும் எடுபடும் என்பதும் அதே அளவுக்கு உண்மை.
இன அழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்று மட்டும் போராடினால், சில சமயம் இன அழிப்பைத் தடுக்க முடியாமலே கூட போய்விடலாம்; ஆனால், தெளிவான அரசியல் கோரிக்கையையும் முன்வைத்துப் போராடினால் - இன அழிவையும் தடுத்து, அரசியல் உரிமைகளையும் பெற்றுவிடும் சாதகச் சூழல் எமக்கு கனிந்து வருகின்றது.
எனவே - இன அழிப்பைத் தடுக்கும் படி போராடி உலகத்தின் கவனத்தை ஈர்த்து, ஈர்க்கப்பட்ட அந்தக் கவனத்தின் முன்னால் எமது தெளிவான அரசியல் போரிக்கைகளையும் நாம் முன்வைக்க வேண்டும்.
அதற்கு இது தான் மிகச் சரியான நேரம்.
அடிப்படையான எமது அரசியற் கோரிக்கைகள் இரண்டே இரண்டு தான்.
அந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைகளில் எந்தவித மாற்றங்களும் இருக்கக் கூடாது; ஏனெனில், அவை இரண்டுமே, மேற்குலகு போற்றும் 'ஜனநாயக' வழிமுறைகளினூடாகத் தமிழர்களால் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்ட விடயங்கள்.
ஒன்று - 'தமிழீழத் தனியரசே எமக்கான தீர்வு': 1977 நாடாளுமன்றத் தேர்தலில், அந்தத் தீர்வுக்கு வக்களித்து, நாம் அதனைத் தெளிவாகச் சொல்லியாகிவிட்டது. அதில் இப்போது எந்த மாற்றமும் இல்லை; தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானிக்க இனி ஒரு பொதுவாக்கெடுப்பும் (Referendum) தேவையில்லை.
இரண்டாவது - தமிழீழ விடுதலைப் புலிகளே எமது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் (Authentic representatives): 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அங்கீகாரத்திற்கு வாக்களித்து, விடுதலைப் புலிகள் பற்றிய தமிழர்களின் நிலைப்பாடு தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. அதில் எந்த மாற்றத்திற்கும் இனி இடமில்லை.
இந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைளையும் இந்த உலகம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் விதமான புறச்சூழல் நிச்சயமாக ஏற்படும்.
- 'புலிகள் எங்கள் சுதந்திரப் போராளிகள்' என்பதை இந்த உலகத்தின் செவிப்பறை கிழிய நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருக்க -
- சிங்களப் படைகளின் முன்னேற்றங்களுக்கு எதிராகப் புலிகள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க -
- காங்கிரஸ் - கருணாநிதி கூட்டணியைத் தோற்கடித்துத் தமிழ்நாட்டு மக்கள் புறந்தள்ள -
இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்றபோது - எமக்கான ஒருநாள் நல்லவிதமாக விடிந்தே ஆகும்.
இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்ற போது - இந்த உலகம் எமது குரலைக் கேட்டுத்தான் ஆகும்; எமக்குச் சாதகமான முடிவுகளை எடுத்துத்தான் ஆகும்.
வன்னிப் போரைப் புலிகளும், இந்தியத் தேர்தலை எம் தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக்கொள்ள - எமக்குச் சாதகமான உலகச் சூழலை ஏற்படுத்த வைக்கும் உலகளாவிய எமது போராட்டங்கள் இதே முனைப்புடனும், இதைவிட அதிக முனைப்புடனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்.
சிலையாய் நிற்கின்ற நேரு மாமாவின் தலையை உடைத்து, சும்மா கிடக்கின்ற சிறிலங்கா தூதரகத்தை நொருக்கி - எமது நோக்கத்தையும், கவனத்தையும் வன்முறைகளில் சிதறவிடாமல் - தெளிந்த நோக்குடன் எமது போராட்டம் தொடடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
இதுவரை நாம் வந்து சேர்ந்துவிட்ட இந்த அரசியல் உச்ச நிலையில் இருந்து இனி நாம் திரும்பிப் போக முடியாது.
ஒட்டுமொத்தமாக - எங்களது அரசியல் விடுதலைக்கான காலம் நிச்சயமாகக் கனிந்து வருகின்றது.
எல்லா வழிகளிலும், எல்லா முனைகளிலும், நாம் எல்லோருமாகச் சேர்ந்து போராடி இந்தப் போராட்டத்தை வென்றே தீருவோம் என உறுதி எடுப்போம்....
படுகொலை செய்யப்பட்டுவிட்ட அந்த 4,795+... தமிழர்களின் புதைகுழிகளின் மேல் கைகளை வைத்து;
எங்கள் தேசத்தையும், இனத்தின் கௌரவத்தையும் காக்கும் போரிலே இன்றும் வீழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் விடுதலை வீரர்களின் புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து;
தமிழர் படையின் ஈடு இணையற்ற போர்த் தளபதி பிரிகேடியர் தீபனின் புதைகுழியின் மேலே கைகளை வைத்து! -
சிறிலங்கா படை தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள தயாராக இல்லை
more
புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுபாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 7:00 மணி வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 37 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 112 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதாக தெரியவருகின்றது.
தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு சிறிலங்கா அரச தலைவர் படையினருக்கு நேரடியாகவே உத்தரவிட்டிருப்பதாக சிறிலங்கா அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்ற போதிலும், நேற்று நள்ளிரவு 12:00 மணி முதல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை மக்கள் அதிகமாகவுள்ள பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை முதல் புதுக்குடியிருப்பில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதி மீது தொடர்ச்சியான தாக்குதல்களை தொடங்கியுள்ள சிறிலங்கா படையினர், பொதுமக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் பகுதிகளை நோக்கியும் வழமைபோலவே எறிகணைத் தாக்குதல்களைப் பெருமளவுக்கு மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி நள்ளிரவு முதல் எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் பீரங்கி மற்றும் தொலைதூர துப்பாக்கி தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருகின்றனர்.
இன்று காலை 7.00 மணிவரையில் நடைபெற்ற தாக்குதல்களில் 37 தமிழர்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில் 112 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
தாக்குதல்கள் தொடர்வதால் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படலாம்.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள பதுங்குகுழிகள் அனைத்தும் வெள்ளக்காடாகக் காணப்படும் நிலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள இந்த அகோர தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பிக்கொள்ள முடியாது மக்கள் சிதறியோடுவதைத்தான் இன்று அதிகாலையிலேயே காண முடிந்தது.
இதேவேளையில் புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பச்சைப்புல்மோட்டைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதியை நோக்கி படையினர் இன்று அதிகாலை முதல் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, விடுதலைப் புலிளும் எதிர்த்தாக்குதல்களை நடத்த மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன.
இன்று அதிகாலை முதல் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், களநிலைமைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல் சிறிலங்கா படைத்தரப்பினர் தாக்குதல்களை தொடங்கியிருப்பது தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதைத்தான் காட்டுவதாக உள்ளது -
ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்!
more
ஈழத்தில் ஆயிரம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு புலி கூட தப்பி விடக்கூடாதென ராஜபக்ஷேவின் சிங்கள ராணுவம் மக்களை கொன்று குவித்து வருகிறது. அன்றாடம் வரும் உயிரிழப்புக்களின் சோகம் தமிழகத்தில் வெறும் புள்ளிவிவரங்களாய் நீர்த்து போகிறது. அ.தி.மு.க ஆதரவில் நெடுமாறனின் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையும், தி.மு.க ஆதரவு நல உரிமைப் பேரவையும் மாறி மாறி தேர்தல் காலத்தில் பத்தோடு ஒன்றாக ஈழம் குறித்த அழுகுணிக் குரலை ஒலிக்கின்றன.
குஜராத்தில் முசுலீம்களை இனப்படுகொலை செய்த பா.ஜ.கவையும், ஈழப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கும் அ.தி.மு.கவின் ச்சிகலா நடராஜனையும் அருகில் வைத்துக் கொண்டு நெடுமாறன் ஈழத்திற்காக கண்ணீர் விடுகிறார். அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க, சி.பி.ஐ முதலான கட்சிகளெல்லாம் மத்திய அரசும், கருணாநிதியும் ஒன்றும் செய்வில்லை என லாவணி பாடுகிறார்கள். இதே மத்திய அரசில் இவ்வளவு நாளும் பொறுக்கித் தின்ற ராமதாஸ் இதைச் சொல்வதற்காக கூச்சப்படுவதில்லை.
போயஸ் தோட்டத்தில் புரட்சித் தலைவியின் மூன்று நிமிட தரிசனத்திற்காக மூன்று மணிநேரம் காத்திருந்து
நாலு சீட்டு கூட தரமறுக்கும் அம்மாவிடம் ராப்பிச்சைக்காரனைப் போல மன்றாடும் இந்த வீரர் ஈழத்தில் பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடுமென சவடால் அடிக்கிறார். கோமாளிகள் வீர வசனம் பேசினால் எப்படி?
செவ்வாய்க்கிழமை நெடுமாறன் பேரவை ஆர்ப்பாட்டம் செய்ததற்காக தாங்களும் கணக்குக் காட்ட வியாழக்கிழமை தி.மு.க ஈழத்தில் போரை நிறுத்துமாறு ஊர்வலம் நடத்துகிறது. போரை நடத்துபவர்களே அதை நிறுத்தச் சொன்னால் அதன் பொருளென்ன? தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈழத்தில் ஏதாவது நடந்து மக்களின் உணர்வு தனக்கு எதிராக திரும்பக்கூடாது என்பதற்காத்தான் இந்த நாடக ஊர்வலம்.
ராமேஸ்வரத்தின் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கப்பற்படையால் சுடப்படுகிறார்கள். அதைக் கூட தடுக்க வக்கற்ற கருணாநிதி ஈழத்திற்காக நாடகமாடுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்? விஷவாயுக் குண்டுவீச்சால் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கரிக்கட்டையாக எரிந்து கிடக்க இந்த குண்டை அளித்தும், படையை வழிநடத்தியும் உதவி செய்வது இந்திய அரசுதான் என்பது இப்போது உலக நாடுகள் எல்லாமும் அறிந்த விசயம். அத்தகைய அரசில் அமைச்சர்களாய் பங்கேற்று ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க யாரை எதிர்ப்பதாக ஏய்க்கிறது?
அழகரி என்ற ரவுடி தனதுமகன் என்ற ஒரே காரணத்திற்காக எம்.பியாக்கி பார்க்கத் துடிக்கும் கருணாநிதிக்கு ஈழத்தின் துயரம் என்னவென்று தெரியுமா? எம். பிக்கள் ராஜீனாமா, மத்திய அரசுக்கு தந்தி, மனித்ச் சங்கிலி, உண்ணாவிரதம், எல்லாம் முடிந்து விட்டது. மிச்சமிருப்பது கோவணம் கட்டிய ஊர்வலம்தான. அதுதான் சுயமரியாதை அற்ற இந்த ஜன்மங்களுக்கு சரியாகப் பொருந்தும்.
தமிழகத்தில் எவ்வளவு தீவிரமாக ஈழம்பற்றிய உணர்ச்சி மேலோங்கியதோ அவ்வளவு சீக்கிரம் வற்றிப் போவதற்கு இந்த துரோகிகளே முழு முதல் காரணம். இதைத் தாண்டி தமிழக மக்களிடமும், இளைஞர்களிடமும் ஈழத்தில் நல்லது ஏதும் நடக்காதா, நாம் ஏதாவது செய்யவேண்டாமா என்ற ஆதங்கம் இருக்கிறது. ஆனால் அதை ஓட்டுப் பொறுக்குவதற்கான முகாந்திரமாக எல்லாக் கட்சிகளும் மாற்றிவிட்டன.
தி.மு.க நடத்தும் ஊர்வலத்தில் ஈழத்தில் குண்டு போட்டு தமிழனைக் கொல்லும் காங்கிரசு கட்சியும் கலந்து கொள்கிறதாம். இவ்வளவு நாளும் இந்தக் காங்கிரசை எதிரி என பிலாக்கணம் வைத்த திருமாவளவனும் இந்த ஊர்வலத்தில் மானங்கெட்டு கலந்து கொள்கிறாராம். இவர்களையெல்லாம் நம்பி ஏதாவது செய்வார்கள் என எண்ணிய ஈழத்தமிழ் மக்கள் இப்போதாவது இவர்களைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டும்.
இன்று உலகமெங்கும் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களால் செய்ய முயன்ற அனைத்தையும் செய்து போராடுகிறார்கள். அந்தப் போராட்டங்களோடு தமிழகமக்களும், மாணவர்களும் இந்த ஓட்டுக் கட்சிகளைப் புறந்தள்ளி தனியாக, எழுச்சியான போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். அந்தப் போராட்டம் இந்திய அரசின் கழுத்தைப் பிடித்து உலுக்குவதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஈழத்தின் இறுதி மூச்சை காப்பாற்ற நாதி இருக்காது -
கலைஞர் அன்றும் - இன்றும்!
more
அன்று “இன்றைக்கு இலங்கைத் தமிழன் பாதிக்கப்படுகிறான். தமிழ்நாட்டிலே ஓர் அரசும் இல்லை. ஆகவே படை அனுப்பப்படவில்லை. எனவே அந்த அரசு இல்லையே என்கின்ற என்னுடைய ஏக்கத்தை வெளியிடுகிறேனேயல்லாமல் வேறல்ல. அப்படி ஓர் அரசை உருவாக்க வேண்டும். இந்தியாவிலே நாங்கள் 1962 இல் கைவிட்டு விட்ட பிரிவினைவாதத்தை இனி எடுத்து வைத்து அதற்கு ஆதாரம் தேடுகிறேன் என்று யாராவது அவசர அரசியல்வாதிகள் பேச முன் வருவார்களேயானால் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், துன்பத்தால் துயரத்தால் மகனை பறி கொடுத்துவிட்ட பரிதாபத்தால் அழுது கொண்டிருக்கின்ற ஒரு தாய் கண்ணீரும் கம்பலையுமாக ஐயோ பாவி போய்விட்டானே என்று சொன்னால், பாவி என்று சொன்னதற்கு அந்த நேரத்திலே அவனை திட்டுகின்ற பொருளல்ல.
அன்பு, பாசம், பற்று இவைகளால் தான், “ஐயோ! பாவி போய்விட்டாயே” என்று இறந்த மகனைப் பற்றிக்கூட சொல்லுவார்கள். அதைப்போலத்தான் நான். ஆதங்கப் படுகிறேன், ஏக்கமடைகிறேன், வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் என்றால் ராஜராஜசோழன் இருந்தான்; ராஜேந்திரச் சோழன் இருந்தான். அவர்களுக்குக் கீழே தமிழகத்தில் ஒரு அரசு இருந்தது. இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்பட்டால் உடனே படை சென்றது. இலங்கைத் தமிழன் காப்பாற்றப்பட்டான். இன்றைக்கு அங்கே அரசில்லை. ஆனால் ‘டெசோ’ இயக்கமென்ற முரசு இருக்கிறது.....
நாம் வடநாட்டை எட்டிப் பார்த்து, வட நாட்டிற்கு நடந்து நடந்து பார்த்து, முறையீடுகளை கொண்டுப்போய்க் கொடுத்து கொடுத்துப் பார்த்து, கிளர்ச்சிகளை நடத்தி நடத்திப் பார்த்து, சிறைச்சாலைகளை நிரப்பி நிரப்பிப் பார்த்து, இங்கே இருக்கின்ற திராவிடர் கழக வீரமணி தலைமையிலே ஆகஸ்டு தினத்தை துக்க தினம் என்றெல்லாம் அறிவித்துப் பார்த்து, மாவீரன் நெடுமாறன் அவர்கள் தியாகப் பயணத்தை நடத்திப் பார்த்து, தி.மு.க.வினர் இரண்டு மூன்று முறை சிறைச்சாலைகளை நிரப்பி, 30,000; 40,000 பேர் சிறைச்சாலைகளிலே அடைக்கப்பட்டு, 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களுடைய தேக்குமர தேகங்களுக்குத் தீயிட்டுக் கொண்டு முடிந்த எல்லாவற்றிற்கும் பிறகு, வடக்கே இருக்கிற டெல்லிப் பட்டணம் - அங்கே அமர்ந்திருக்கின்ற மத்திய அரசு - ராஜீவ் காந்தியினுடைய அரசு; இன்னமும் பேச்சு வார்த்தை, பேச்சு வார்த்தை என்று காலம் தாழ்த்திக் கொண்டிருக்குமேயானால், வேறு வழி என்ன?”
(கலைஞர் ‘டெசோ’ கூட்டங்களில் 1985 இல் பேசியது. தி.மு.க. வெளியீடான ‘தமிழனுக்கு ஒரு நாடு - தமிழ் ஈழ நாடு’ நூல்.)
இன்று....
“இந்தியா இறையாண்மை மிக்க நாடு. அதைப் போலவே இலங்கையும் இறையாண்மை மிக்க நாடுதான். ஒரு இறையாண்மை மிக்க நாடு மற்றொரு இறையாண்மை மிக்க நாட்டிற்கு எந்த வகையான வேண்டுகோளை விடுக்கலாம். அந்த நாட்டின் மீது எத்தகைய அழுத்தத்தைக் கொடுக்கலாம்; அரசியல் சட்ட ரீதியாக இருந்துவரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மக்கள் அறிவார்கள்”
- டெக்கான் கிரானிக்கல் ஏட்டுக்கு கலைஞர் பேட்டி. ‘முரசொலி’ (23.3.2009) -
2 வருடங்களில் 77 ஆயிரம் தமிழர்கள் படுகொலை?!: இரண்டரை லட்சம் பேரை கொல்ல அரசு திட்டம்?!:
more
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்த 77 ஆயிரம் தமிழர்களை கடந்த இரண்டு வருடங்களில் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினர் கொன்று குவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் வன்னிப் பகுதிகளை ஆக்கிரமித்தபோது சிறிலங்கா படையினர் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களை பிடித்தனர்.
அவர்களில் 63 ஆயிரம் தமிழர்கள் மாத்திரமே வவுனியால் மகிந்த அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர், மிகுதி 77 ஆயிரம் பேரும் எங்கே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள தனது வன்னி மாவட்ட தொகுதி மக்களுடன் பல சிரமங்கள் இன்னல்களின் மத்தியில் அங்கு தங்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பில் நீண்ட காலமாக வாழ்ந்த மக்களின் புள்ளி விபரம் ஒன்றை சுட்டிக்காட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அபாயகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.
வன்னிப்பெரு நிலப்பரப்பில் 4 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வந்திருந்தனர். சிறிலங்கா படையினரின் நில ஆக்கிரமிப்பை அடுத்து வன்னியில் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்று தற்போதைய புள்ளி விபரம் ஒன்றைக் காண்பித்த அவர், ஒரு லட்சத்து 40 ஆயிரம் மக்கள் வன்னியில் தற்போது வன்னியில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மன்னார் தொடக்கம் முல்லைத்தீவு வரை மகிந்த அரசாங்கம் நடத்திய நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போது, கடந்த இரண்டு வருடங்களில் சிறிலங்கா படையினரால் அந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் மக்கள் பிடிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு பிடிபட்டவர்களில் 63 ஆயிரம் பொதுமக்கள் மாத்திரமே தமது நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.
அப்படியானால், மிகுதி 77 ஆயிரம் பொதுமக்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனரா? என்ற அபாயகரமான கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் தனது அறிக்கையில் எழுப்பியுள்ளார்.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட மிகுதி 77 ஆயிரம் பொதுமக்களும் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தையும் அச்சத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா படையினர் வன்னிப்பெரு நிலப்பரப்பில் ஆக்கிரமித்த பல இடங்களில் ஏராளமான மனிதப் புதைகுழிகள் இருப்பதாக படையினரிடம் இருந்து மீண்டும் விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்கு தப்பி வந்தவர்கள் தன்னிடம் கூறியதை மேற்கோள் காட்டியே மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தனது சந்தேகத்தையும் அச்சத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 3 லட்சத்து 30 ஆயிரம் மக்களை தவிர எஞ்சிய ஆயிரம் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் கூற வேண்டும் என மனித உரிமை சட்டத்தரணிகள் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.
மேலும் -
தற்போது வன்னியில் 70 ஆயிரம் மக்கள் தான் உள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் முற்று முழுதான பொய்யான தகவலை கூறுகின்றது. அப்படியானால், தற்போது இங்கே உள்ள 3 லட்சத்து 30 ஆயிரம் மக்களும் நாளை படையினரின் கையில் அகப்பட்டால், அவர்களில் இரண்டரை லட்சம் வரையானோரை படுகொலை செய்வது தான் அரசின் நோக்கம் போல உள்ளது எனவும் அவர் அச்சம் வெளியிட்டார்.
இதேவேளையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரை நிகழ்த்திய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வன்னியில் பல்லாயிரக்கணக்கான மக்களை காணவில்லை என்ற அச்சத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் எந்தவிதமான தொடர்புகளும் இன்றி வன்னியில் உள்ளதாகவும் அவர் தொடர்பாக தகவல்களை அறிய முடியாமல் இருப்பதாகவும் இன்று வியாழக்கிழமை கொழும்பில் வெளியான ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)