Advertisement
கறைபடிந்த காங்கிரஸ் வரலாற்றுப் பக்கங்கள்!
வர்ணஸ்ரமத்தையும், மதத்தையும் நம்பிய காந்தி, கடைசியில் மதவெறியர்களாலே சுட்டுக் கொல்லப்பட்டார். கடைசி காலங்களில் பார்ப்பனர்களை எதிர்க்கத் தொடங்கியதும், இஸ்லாமியர்களின் நியாயங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கியதுமே இதற்குக் காரணம்.
• பத்துக்கு மேற்பட்ட முறை - காந்தியாரை கொலை செய்யும் முயற்சிகள் நடந்தாலும், ‘சுதந்திர’ இந்தியாவில் உள்துறை அமைச்சராக இருந்த பட்டேல், காந்திக்கு உரிய பாதுகாப்பை வழங்கவில்லை. சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன், காந்தி யின் மரணத்துக்கு பட்டேலின் அலட்சியமே காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ‘சுதந்திரம்’ பெற்ற காலத்தில் காங்கிரசின் தலைவராக இருந்த மவுலானா அபுல்கலாம் ஆசாத் எழுதிய தனது சுயசரிதையில் (ஐனேயை றுiளே குசநநனடிஅ), உள்துறை அமைச்சர் பட்டேல் அலட்சியம் காட்டியதுதான் - காந்தி மரணத் துக்கு காரணமாகிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
• காந்தியை கொலை செய்யப் போவதாக முன் கூட்டியே பம்பாய் மாகாண உள்துறை அமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் மொரார்ஜி தேசாய்க்கு கடிதம் எழுதியதாக காந்தியார் கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே (இவர் நாதுராம் கோட்சேயின் தம்பி) விடுதலையான பிறகு ‘பிளிட்°’ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அது பற்றி விசாரிக்க அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சி ஜி.எஸ். பாதக் என்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்தது. ஆனால் அந்த விசாரணை ஆணையம் செயல்படு வதில் காங்கிரஸ் அலட்சியமே காட்டியது. நீதிபதி பாதக் விசாரணையை முடிப்பதற்கு முன்பே வேறு பதவிக்கு மாற்றப்பட்டார். பிறகு எதிர்க் கட்சிகள் காட்டிய எதிர்ப்பால் நீதிபதி கபூர் என்பவர் தலைமையில் மற்றொரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க காந்தி கொலை தொடர்பான அரசு ஆவணங்கள் டெல்லியி லிருந்து விமானத்தில் பம்பாய் கொண்டு போகப் பட்டன.
• ஆனால், விமானத்திலே அந்த ஆவணங்கள் திருட்டுப் போய்விட்டதாக மத்திய காங்கிரஸ் ஆட்சி ஆணையத்தின் முன் கூறிவிட்டது. கபூர் ஆணையம் ஆர்.எஸ். எஸ் சைக் காப்பாற்றக்கூடிய ஓர் அறிக்கையை தந்து விசாரணையை முடித்துக் கொண்டது. இப்படி, தேசத் தந்தை காந்தியின் கொலையைப் பற்றியே அக்கறை காட்டாத கட்சிதான் காங்கிரஸ்.
• கேரள காங்கிரஸ் தலைவர்கள் தொடங்கிய வைக்கம் - தீண்டாமை ஒழிப்புப் போரைத் தொடர முடியாத நிலையில் அவர்களின் அவசர அழைப்பையேற்று தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார், வைக்கம் விரைந்து, தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரமாக தொடர்ந்தார். ஆனால், காங்கிரஸ் தலைவர்களான காந்தியும், ராஜகோபாலாச்சாரி யும் அதை ஆதரிக்கவில்லை. பெரியார் போராட் டத்திற்குப் போயிருக்கக் கூடாது என்று குறை கூறினர். போராட்டம் வெற்றி பெற்ற பிறகு, சமரசம் பேச காந்தியை தலையிட வைத்த ராஜ கோபாலாச்சாரி போராட்டத்தில் பெரியாரின் பங்கினைக் குறைத்தார். தனது சுயசரிதையில் வைக்கம் போராட்டம் பற்றி எழுதிய காந்தியும் பெரியார் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிட வில்லை.
• ஹோம்ரூல் இயக்கத்தைத் தோற்றுவித்தவரும், பிரம்ம ஞானசபைக்கு தலைமை ஏற்றவருமான அன்னிபெசன்ட் என்ற அயர்லாந்து நாட்டுப் பெண்மணி. பார்ப்பனர்களின் செல்லப் பிள்ளையாகப் பாராட்டப்பட்டவர். இத்தாலியி லிருந்து வந்து, காங்கிரசுக்கு தலைமையேற்ற சோனியா, இன்று சிங்கள ராணுவத்தின் இனப் படுகொலையை ஆதரிப்பதுபோல், அன்று, அன்னிபெசன்ட், ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர் நடத்திய படுகொலையை நியாயப்படுத்தினார். ‘பஞ்சாபி, சீக்கியர்கள் செங்கல்லை வீசியதற்கும், அதற்கு ஜெனரல் டயர் பீரங்கிக் குண்டுகளைப் போட்ட தற்கும் சரியாகப் போய்விட்டது. இதுதான் அரசு தர்மம்’ என்றார்; அதேபோல் தான் ஈழத் தமிழர் படுகொலைக்கும் இன்று காங்கிரசும் தி.மு.க.வும் ‘இறையாண்மை தர்மம்’ என்கின்றன.
• அகில இந்திய காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தபோது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் செயலாளராக இருந்த ஏ.ரங்கசாமி அய்யங்கார், தலைவராக இருந்த ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் கஸ்தூரி ரங்க அய்யங்கார், சுயராஜ்யக் கட்சி தலைவர் சத்தியமூர்த்தி அய்யர் ஆகியோர், பிரிட்டிஷ் அரசு நடவடிக்கைகளுக்கு பயந்து, பதவிகளிலிருந்து விலகல் கடிதம் கொடுத்து ஓடிவிட்டனர். அகில இந்திய மட்டத்தில் முன்னணித் தலைவராக இருந்தவரும், ‘சர்வாதிகாரி’ என்று வர்ணிக்கப்பட்டவருமான மற்றொரு தேசியத் திலகமான சீனிவாச அய்யங்கார், ஒத்துழையாமை இயக்கமே சட்ட விரோதம் என்று கூறிவிட்டார்.
• இந்து மதம் திணித்த குழந்தைப் பருவத்திலே திருமணம் செய்து வைக்கும் கொடுமையை நிறுத்த 1928 இல் அன்றைய சென்னை மாகாண சட்டசபையில் தீர்மானம் வந்தபோது, தமிழ்நாடு சுயராஜ்யக் கட்சி (சுய ராஜ்யக் கட்சி என்பது தேர்தலில் பார்ப்பனர்கள் போட்டியிடுவதற்காக காங்கிரசார் உருவாக்கிய பினாமி அமைப்பு) பால்ய விவாகத்தை ஒழித்து விட்டால், ‘கற்பு கெட்டு விடும்’ என்று சட்ட சபையில் எதிர்த்தது.
• கோயில்களில் பெண்களை ‘தேவதாசிகளாக்கும்’ இந்து மதக் கொடுமையை ஒழிக்க - 1930 இல் சென்னை சட்டமன்றத்தில் தீர்மானம் வந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர், காங்கிரஸ் தலைவரான சத்திய மூர்த்தி அய்யர். இந்த சட்டத்தை எதிர்த்து சிறைக்குப் போவேனே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நரகத்துக்குப் போக மாட்டேன்; சட்டத்தைவிட சா°திரமே முக்கியம் என்று பேசினார்; அவர் பெயரைத் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு, இப்போது சூட்டியுள்ளார்கள்.
• பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் நலனுக் காக சட்டசபையில் கேள்வி கேட்க அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கேள்விகளை கேட்பது சத்தியமூர்த்தி வழக்கம். இதை அவரே ஒப்புக் கொண்டும் எழுதியுள்ளார். இப்போதும் நாடாளுமன்றத்தில் பெரும் தொழில் நிறுவனங் களுக்காக, அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, உறுப்பினர்கள் சிலர் கேள்வி கேட்கும் முறைக்கு வழிகாட்டியதே காங்கிரஸ் கட்சி தான்.
• காந்தி - பிரிட்டிஷாருக்கு எதிராக ‘ஒத்துழை யாமை இயக்கம்’ அறிவிக்கப்பட்ட போது, சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியது, சத்திய மூர்த்தி அய்யர், ரங்கசாமி அய்யங்கார், சீனிவாச அய்யங்கார் பதவியை விட விருப்ப மின்றி அரைமனதோடு பதவி விலகினார்கள். போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டார்கள்.
• 1931 இல் கராச்சியில் (இன்று பாகிஸ்தானிலுள்ள நகரம்) அகில இந்திய காங்கிரஸ் மாநாடு கூடியது. அதில் பொது கிணறு, பொது வீதி, பொது இடம் ஆகியவற்றை எல்லோரும் பயன்படுத்த உரிமை உண்டு என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதுபற்றி சத்தியமூர்த்தி அய்யர் - அவசர அவசரமாக ‘இந்து’ ஏட்டில் ஒரு விளக்கம் எழுதினார். ஒரு வகுப்பினருக்கு உரிமையான இடம் (அதாவது அக்ரகாரம்) கோயில் மற்றும் அது தொடர்புடைய இடங்களுக்கு இந்தத் தீர்மானம் பொருந்தாது என்பதே தேசியத் திலகம் சத்தியமூர்த்தி அய்யர் தந்த விளக்கம்!
• பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது, காந்தி பிரிட்டிஷ் அதிகாரி இர்வின் என்பவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். சட்டமறுப்பு இயக்கத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது பற்றி அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டாலும், பகத்சிங் தூக்கிலிடப்படுவது பற்றி - காந்தி, இர்வினுடன் எதையுமே பேச வில்லை. மாறாக, காந்தி தூக்கிலிடுவதை ஆதரித் துள்ளார். பகத்சிங்கை எப்போது தூக்கிடலாம் என்பது குறித்து, விவாதித்துள்ளதோடு, காங்கிரஸ் மாநாடு நடக்கும் நேரத்தில் தூக்கிலிட நேரம் குறித்தார்கள். வழக்கமாக விடியற்காலையில்தான் தூக்கு போடப்படும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக பகத்சிங்கும், அவரது தோழர்கள் ராஜ குரு, சுகதேவ் ஆகியோரும் மாநாடு நடக்கும் நேரத்தில் இரவு 7.30 மணியளவில் தூக்கிலிடப் பட்டார்கள்.
• பிரிட்டிஷாரின் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் கீழ் 1938 இல் பிரிட்டி ஷாரோடு சமரசம் செய்து கொண்டு, தமிழ் மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முன் வந்தது. காங்கிரஸ் முதல்வராக பதவிக்கு வந்த ராஜகோபாலாச்சாரி பார்ப்பனர் (ராஜாஜி) - பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைப் புகுத்தினார். 10 பேர் கொண்ட அமைச்சரவையில் 4 முக்கியப் பொறுப்புகளில் பார்ப்பனர்களை நியமித்தார். ஒழுக்கக் கேடாக செயல்பட்டார் என்று காங்கிரஸ் கட்சியிலிருந்து 5 ஆண்டுகள் நீக்கப்பட்டிருந்த டி. எஸ். எஸ். ராஜன் என்ற பார்ப்பனரை அழைத்து அமைச்சராக்கினார். இலவசக் கல்வித் திட்டத்தை ரத்து செய்தார். வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை முடக்கப் பட்டது. உயர் பதவிகளில் பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டனர். அரசு கடிதம் - பதிவேடு களில் ‘திரு’ என்று போடுவதற்கு பதிலாக ‘ஸ்ரீ’ என்றே போட உத்தரவிட்டார். விசுவ கர்ம சாதியார் பெயருக்குப் பின்னால் ‘ஆச்சாரி’ என்று போடக்கூடாது. ‘ஆசாரி’ என்றே போட வேண்டும் என்று உத்தரவிட்டார். (ஆச்சாரி என்றால் பார்ப்பனரைக் குறிக்கும் என்பதால்) பார்ப்பன மனுதர்ம ஆட்சியையே அன்று காங்கிரஸ் ஆட்சி நடத்தியது.
• மீண்டும் ‘சுதந்திர’ இந்தியாவில் 1952 இல் காங்கிரஸ் பதவிக்கு வந்தபோது, ராஜகோபாலாச் சாரியே முதல்வர். 15000 ஆரம்பப்பள்ளிகளில் 6000 பள்ளிகளை நிதி இல்லை என்று கூறி மூடினார். குழந்தைகள் அப்பாவின் தொழிலை பள்ளியில் கற்றுக் கொள்ள உத்தரவிட்டார். அரை நேரம் படிப்பு; அரை நேரம் அப்பாவின் தொழிலை கற்கவேண்டும்; மீண்டும் குலத் தொழில் செய்யும் நிலையை உருவாக்கினார்.
• “சாதி முறை ஒழிய வேண்டும் என்று பலர் குறை கூறுகிறார்கள். அதை ஒழிக்க முடியாது. நன்கு யோசித்துத்தான் நமது முன்னோர்கள் வர்ணஸ்ரம முறையை வகுத்துள்ளார்கள். அதன்படி அவரவர்கள் தங்கள் முறைக்கேற்றவாறு நடந்து மக்களுக்கு தொண்டு புரிய வேண்டும்” என்று கரூரில் காங்கிரஸ் தலைவர் ராஜகோபாலாச்சாரி வெளிப்படையாகவே பேசினார். (‘சுதேச மித்திரன்’ 29.1.61) பெரியார் போராடி பார்ப்பன ஆட்சியை ஒழித்தார்.
• பிறகு பெரியார் ஆதரவுடன் காமராசர் முதல்வரா னார்; அவரது ஆட்சிதான் தமிழரின் பொற்கால ஆட்சியாக இருந்தது. தமிழ் மண்ணின் உளவியலைப் புரிந்து, தமிழர்களுக்கான ஆட்சி நடத்தினார். டெல்லி ஆட்சியின் உத்தரவுகள் தமிழகத்துக்கு எதிராக இருந்தால் செயல்படுத்த மறுத்தார். தமிழர் அடையாளத்தோடு இருந்த வரை வெற்றிகளைக் குவித்த காமராசர், மீண்டும் அகில இந்திய அரசியலுக்குள் நுழைந்தபோது, காங்கிரஸ் பார்ப்பனத் தலைமை அவரை அவமதித்தது; புறக்கணித்தது. இந்திரா அவரை கட்சியிலிருந்தே நீக்கினார். தமிழகத்தில் காமராசர் கட்டி எழுப்பிய ஆட்சியும் 1967 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது.
• எந்த அகில இந்திய தலைமை - இந்திராவின் தலைமை - காமராசரை புறக்கணித்தோ அந்தத் தலைமையுடன் கைகுலுக்கி, காமராசரின் காங்கிரசை வீழ்த்த, கலைஞர் கருணாநிதி, 1971 இல் இந்திராவுடன் கூட்டணி அமைத்தார்.
• அதே கலைஞர் கருணாநிதியின் ஆட்சியை இந்திராவின் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தான் கவிழ்த்து, ‘மிசா’வின் கீழ், தி.மு.க.வினரை கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைத்து, தி.மு.க. ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, சர்க்காரியா விசாரணை ஆணையத்தை அமைத்தது. தொடர்ந்து பதவிக்கு வந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா ஆட்சி, இரண்டு ஆண்டுகளில் கவிழ்ந்தவுடன், மீண்டும், காங்கிரசுக்கு நட்புக்கரம் நீட்டினார், கலைஞர் கருணாநிதி. ‘நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக!’ என்றார். அதே ‘துரோக மரபு’ இன்றும் தொடருகிறது.
• ஈழத் தமிழர் இனப்படுகொலைகளுக்கு காரணமான சிங்கள ராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்துவரும் சோனியாவை சொக்கத் தங்கம் என்கிறார்; கலைஞர் கருணாநிதி.
• சோனியா ஆட்சி அமைக்க தமிழர்களின் வாக்குகளைக் கேட்கிறார்;
• முல்லைத் தீவில் - ஒவ்வொரு நாளும் மரண ஓலங்கள்;
• கொத்து கொத்தாய் செத்து மடியும் தமிழர்கள்;
• உணவு இல்லை; மருந்து இல்லை; சிகிச்சை இன்றி - குண்டுவீச்சில் கைகால்களை இழந்தவர்கள் துடிதுடித்துச் சாவும் அவலங்கள்;
• இந்த கொடுமைகளுக்கு, இன அழித்தலுக்கு சிங்கள அரசுக்கு நிதியுதவியும், ஆயுத உதவியும், போர் பயிற்சியும் தரும் சோனியாவின் காங்கிரசு மீண்டும் பதவிக்கு வரவேண்டுமா?
• தமிழக ராமேசுவரம் மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு, கைது செய்வதையும், படகுகளை தாக்குவதையும், மீனவர் வாழ்வாதார உரிமைகளை நசுக்குவதையும், தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் - சிங்கள கப்பல் படைக்கு இந்தியா ஆயுத உதவி செய்யலாமா? இது பற்றி கவலைப்படாத சோனியாவின் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வரலாமா?
தமிழர்களே! தமிழர்களே!
• காங்கிரஸ் பகையையும் அதற்கு துணைப்போகும் தி.மு.க. துரோகத்தையும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்து பாடம் புகட்டுவீர்!
0 comments: